Friday, October 3, 2003

Germany reunification day!

இன்று ஜெர்மனியில் விடுமுறை. கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் 1991ம் ஆண்டு அக்டோ பர் 3ம் தேதி ஒன்றாக இணைந்ததை நினைவு கூறி மகிழும் நாள் இது. ஜெர்மனி முழுதுமாக இந்த விடுமுறை நாள் அளிக்கப்படுகின்றது.

ஜெர்மானியர்களில் அதிலும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையில் இது விடுதலை கிடைத்த ஒரு நாள் என்றே சொல்ல வேண்டும். ஜெர்மானியர்களைப் பிரித்திருந்த பெர்லின் சுவர் இந்த நாளில் இடிக்கப்பட்டது. இரண்டு ஜெர்மனியும் ஒன்றிணைந்ததனால் கிழக்கு ஜெர்மனியில் இருந்த மக்கள் பலரால் மேற்கு ஜெர்மனிக்கு சுலபமாக வர முடிந்தது. இங்குள்ள வேலை வாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றோடு சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க முடிந்தது.

இன்றளவும் இந்த இரண்டு ஜெர்மனிக்கும் உள்ள வேறு பாட்டினை ஓரளவு காணமுடியும். மக்களின் சிந்தனை ஓட்டம் வாழ்க்கை முறை ஆகியவற்றில் இந்த இரண்டு ஜெர்மனியிலும் இருந்து வருகின்ற மக்களிடம் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைக் காணமுடியும். கல்வி தொழில் எனப் பல பொருளாதார அடிப்படையிலான காரணங்களை முன் வைத்து இவர்கள் இப்போது கலந்து விட்டாலும், சிந்தனையில் இருக்கின்ற வேறு பாட்டினை வைத்துப் பார்க்கும் போது இவர்கள் பெரும்பாலும் தங்களை தனித்துக் கொள்ள அதாவது கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள், அல்லது மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு பெருமைப் படத்தான் செய்கின்றனர்.

No comments:

Post a Comment