Friday, January 5, 2018

மொகாடிஷு - உல்ரிச்ஹ் வாக்னெர்

13 அக்டோபர் 1977 ஜெர்மனியின் லுஃப்தான்சா 181 விமானத்தை சோமாலிய தலைநகர் மொகாடிஷுவிற்குக் கடத்தி 90 பயணிகளை பணையக் கைதிகளாக வைத்தனர் பாலஸ்தீனிய தீவிரவாதிகள். 11 RAF கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே விமானத்தையும் அதில் இருந்த பயணிகளையும் ஒப்படைப்போம் என நிபந்தனை விதித்தனர். ( Mogadischu (2008) என்ற ஜெர்மானிய திரைப்படத்தில் இந்த நிகழ்வை முழுமையாக படமாக்கியிருக்கின்றனர். )
இந்த பயங்கரவாத நடவடிக்கையின் போது விமானத்தையும் பயணிகளையும் மீட்க அமைக்கப்பட்ட GSG-9 mission சிறப்பு மீட்புப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டவர் உல்ரிச்ஹ் வாக்னெர். இவரது சமயோஜித திட்டத்தைப் பயன்படுத்தி 91 பயணிகளையும் ஜெர்மானிய தீவிரவாத எதிர்ப்புப் படை மீட்டது. உல்ரிச்ஹ் வாக்னெர் அவர்களுக்கு இதனைச் சிறப்பித்து சிறந்த அதிகாரி என்ற பட்டத்தை வழங்கியது.
அந்த சிறப்பு மிக்க அதிகாரி உல்ரிச்ஹ் வாக்னெர் அவர்கள் இன்று தன் 88வது வயதில் காலமானார்.
ஜெர்மனியின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீவிரவாத பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்த நிகழ்வும் ஒன்று.






Wednesday, January 3, 2018

குண்ட்ரமிங்கன் அணுஆலை

33 ஆண்டுகள் செயலில் இருந்த ஜெர்மனியின் அணுஆலைகளில் ஒன்று மூடப்படுகின்றது .
2011ல் ஜப்பானின் பூக்குஷிமாவில் நிகழ்ந்த பேரிடரை அடுத்து ஜெர்மனியில் இயங்கும் எல்லா அணு ஆலைகளையும் 2022க்குள் முடக்கும் திட்டம் 2012ல் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தெற்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள குண்ட்ரமிங்கன் அணுஆலை படிப்படியாக மூடப்படும் நடவடிக்கைகள் இன்று தொடங்கின. 2021ல் முழுமையாக இது தன் செயல்பாட்டினை நிறுத்தும்.