Tuesday, October 21, 2003

பனி தொடக்கம்..

சில நாட்களாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எனது அறையின் ஜன்னல் வழியாக வெளியே நிற்கும் எனது காரைப் பார்ப்பதுதான் எனது வேலையாகிப் போய்விட்டது. கார் காணாமல் போய்விடுமே என்ற பயம் ஒன்றுமில்லை. மாறாக கண்ணாடி முழுதும் பணியால் இருகிப் போயிருக்கின்றதா என்று பார்ப்பதற்க்காகத்தான். இன்றும் அப்படித்தான்; எழுந்ததும் ஓடிவந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரே ஆச்சரியம். பனிமழை பெய்து கொண்டிருந்தது. இந்த winter -ன் முதல் பனிமழை இன்று ஆரம்பித்து விட்டது. மலைப்பாங்கான இடங்களில் ஏற்கனவே பனிமழை ஆரம்பித்து விட்டாலும் போப்லிங்கனில் இன்று தான் முதல் முறையாக கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணியைப் பார்க்கின்றேன்.

தமிழ் சினிமா படங்களில் பனிமழையில் கதாநாயகனும் நாயகியும் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்து பனியென்றால் சுகமாக இருக்கும் என்று தப்புக் கனக்குப் போட்டிருந்தவர்களில் நானும் அடங்குவேன். இந்த மாயையெல்லாம் ஜெர்மனிக்கு வந்த சில மாதங்களிலேயே மறைந்து போய்விட்டன. பனியில் snow man
செய்து விளையாடுவதும் snow ball செய்து விளையாடுவதும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் பனிக்காலத்தில் பனியினால் ஏற்படும் சிரமங்களை எண்ணிப்பார்க்கும் போது ஒரு வகையில் பயமாகத்தான் இருக்கின்றது.

நான் ஜெர்மனிக்கு வந்து 2 வாரங்கள் தான் இருக்கும். பல்கலைக்கழகத்தில் வகுப்புக்கள் ஆரம்பித்து விட்டன. அப்போது ஜனவரி மாதம். கடும் பனி பெய்யும் நேரம். அந்த நேரத்தில் நான் கீல் நகரில் இருந்தேன். அங்கு பொதுவாகவே நல்ல பனி பெய்யும். முதல் நாள் வெள்ளிக்கிழமை வகுப்பிற்குச் சென்றிருந்த போது பனி இல்லை. அதனால் பல்கலைக் கழகத்தின் மற்றொரு Campus இருக்குமிடத்திற்கு map வைத்துக் கொண்டு சுலபமாகச் சென்று சேர்ந்து விட்டேன். அடுத்த சில நாட்களில் பனி பெய்ய ஆரம்பித்து தரையெல்லாம் பனியால் மூடிக்கிடந்தது. வகுப்புக்குக் கிளம்பிய நான், முதல் நான் வெற்றிகரமாக வகுப்பிற்குச் சென்று விட்ட தைரியத்தில் எனது campus நோக்கி நடக்க ஆரம்பித்தேன். முதல் நான் சென்றபொழுது அடையாளத்திற்காக சில இடங்களை (landmark) ஞாபகம் வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் தேடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.




டக்கின்றேன்.... நடக்கின்றேன்.... நடந்து கொண்டே இருக்கின்றேனே தவிர பல்கலைக்கழக campus வரவேயில்லை. பனி மூடிவிட்டதால் பல சாலைகள் அடையாளமே தெரியவில்லை. எல்லா இடங்களும் மாறிப்போய் காட்சி அளிக்கின்றன. வெகுதூரம் நடந்திருப்பேன். கண்டிப்பாக வழியை விட்டிருப்பேன் என்று தெரிந்ததும் சாலையில் நடந்து கொண்டிருந்தவர்களை அனுகி ஆங்கிலத்தில் கேட்டால் அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலமே தெரியவில்லை. மனதைத் தளரவிடாமல் நடந்து கொண்டே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் வர ஆரம்பித்து விட்டது. கண்களில் கண்ணீர் வர துடைத்துக் கொண்டே மேலும் நடந்து கொண்டேயிருந்தேன். மேலும் சிலரை அனுகிக் கேட்கலாம் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு இளைஞனிடம் கேட்டேன். என்னிடம் அந்த campus வரைபடமும் இருந்ததால் அதையும் காட்டி அவனிடம் ஆங்கிலத்தில் கேட்க ஓரளவு அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பஸ் எடுத்துச் செல்லுமாறு கூறினான். அதுமட்டுமலாமல் என்னோடு சிறிது நேரம் இருந்து, சரியான பஸ்ஸில் என்னை ஏற்றிவிட்டு , ஓட்டுநரிடம் என்னை குறிப்பிட்ட campus இருக்கும் இடத்தில் இறக்கி விடுமாறும் கேட்டுக் கொண்டான். உதவும் உள்ளம் படைத்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கின்றார்கள்..இல்லையா!

இந்தப் பனியால் இந்த மாதிரி சிரமங்கள் மட்டுமல்ல.. மேலும் பல இருக்கின்றன..!

No comments:

Post a Comment