Thursday, October 30, 2003

Child Prostituition

ஜெர்மனி செக் ஆகிய நாடுகளின் எல்லையில் விரிவாக வளர்ந்து வரும் விபச்சாரம் பற்றிய செய்திகள் சென்ற செவ்வாய் அன்று செய்திகளில் வெளியாகியது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது இந்தச் செய்தி. பொதுவாகவே பலர் ப்ராக் (செக் நாட்டின் தலைநகரம்) செல்ல விரும்புவர். ப்ராக் மற்றும் செக் எல்லையில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கும். இதற்காக பல ஜெர்மானியர்கள் இங்கு செல்வதுண்டு. ஆனால் விபச்சாரத்திற்காகவும் ஜெர்மானியர்கள் இங்கு செல்கின்றனர் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியைத் தான் உருவாக்கியிருக்கின்றது.

மிகச் சிறிய, 8 வயதிற்கும் கீழான செக் குழந்தைகள் இந்த அவல நிலைக்குத் தங்கள் குடும்பத்தினராலேயே தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் இந்தக் குழந்தைகளைப், பெற்றோர் அல்லது உறவினர் எல்லைப்புர சாலைகளில் வருகின்ற ஜெர்மானியர்களின் கார்களில் ஏற்றி விட்டுவிடுகின்றனராம். இந்தக் குழந்தைகளுக்கு 5 - 25 EUR வரை கொடுத்து விட்டு தங்கள் காரியம் முடிந்தவுடன் தப்பித்து விடிகின்றனர். இங்கேயும் இப்படிப்பட்ட அவல நிலையா என நினைக்கும் போது வேதனையாகத் தான் இருக்கின்றது.

ஜெர்மானிய செய்தி நிறுவனம் ஒன்று, கார்களில் வருபவர்களில் பெரும்பாலோர், பவேரியா மற்றும் சாக்ஸெனி பகுதிகளிலிருந்து வருகின்றனர் என்று ஜெர்மானிய வாகன எண்குறிப்பின் அடிப்படையில் சமூக நல ஊழியர்கள் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவிக்கின்றது. மேலும், இந்தக் குழந்தைகள் பரவலாகக் கிழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடுகலிலிருந்து இங்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிகின்றது.

UNICEF நிறுவனத்திற்காக சமூக சேவகி கேத்ரீன் இந்த அவலத்தைப் பற்றிய ஒரு அறிக்கையை எழுதி சமர்ப்பித்திருக்கின்றார். இந்த அறிக்கையின் அடைப்படையில் இப்போழுது செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தியை செக் நாடு மறுத்திருக்கின்றது.

எட்டு வயதே நிரம்பிய குழந்தைகள் சுயமாக தாங்களே பேரம் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்களாம். வருமை மனித நேயத்தை எப்படியெல்லாம் கொல்கின்றது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment