Sunday, May 17, 2020

ஐரோப்பா - கொரொனா தொடர்பான தகவல்கள்


ஜெர்மனியின் எல்லை நாடான லுக்சும்போர்க் நாட்டிற்கான எல்லை போக்குவரத்துத் தடையை நீக்கி 15.5.2020 இரு நாடுகளுக்குமான போக்குவரத்தை அனுமதித்தது ஜெர்மனி.
நெதர்லாந்துக்கான எல்லையும் திறக்கப்பட்டது.

ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உறவினர்களைச் சந்திக்கச் செல்பவர்களுக்கும் அலுவலக ரீதியாக பயணிப்பவர்களுக்கும் எல்லைகள் திறக்கப்பட்டன. முழுமையான எல்லைத் திறப்பு அல்ல இது என்றாலும் முதல் கட்ட நடவடிக்கை எனலாம்.
டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்குமான எல்லை போக்குவரத்து வருகின்ற நாட்களில் இதேபோல சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்பதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஜூன் மாத மத்தியில் ஜெர்மனியின் எல்லா எல்லை நாடுகளுக்குமான எல்லை கட்டுப்பாட்டை நீக்கும் முயற்சியை ஜெர்மனி தொடங்கியுள்ளது.
ஜூன் 3 முதல் இத்தாலி தனது எல்லையை திறக்கின்றது. சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக ஜூன் மாதம் தொடக்கம் ஐரோப்பா இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிகிறது.





-சுபா