Saturday, November 27, 2010

குளிர்காலப் பனி மழை தொடங்கி விட்டது..!

நேற்று அதிகாலையே பனி மழை பெய்யத்தொடங்கியதால் எங்கும் பாற்கடல் போன்ற பனி. நேற்று நாள் முழுக்க கொட்டியதில் இன்றும் பனி கரையாமல் இருக்கின்றது. சில படங்கள் இங்கே இணைத்திருக்கின்றேன் .. இன்று காலை என் சிறு தோட்டத்தில் எடுக்கப்பட்டவை.


செடிகள் பச்சை நிறத்தை மறைத்து வெள்ளை ஆடை உடுத்தியிருக்கின்றன..



புத்தருக்கும் பனியின் புண்ணியத்தில் புதிய சிகை அலங்காரம்..:-)


குருவிகளின் வீட்டையும் பனி அலங்கரித்திருக்கும் காட்சி..!

அன்புடன்
சுபா

Tuesday, November 9, 2010

இன்றைய தேதியில் ஜெர்மனியில் நிகழ்ந்த 2 முக்கிய சரித்திர நிகழ்வுகள்

யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த காலகட்டமான 2ம் உலக யுத்த நேரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Crystal Night நிகழ்வு 9,10, தேதி நவம்பர் மாதம் 1938ல் நிகழ்ந்தது. இந்த Crystal Night ஜெர்மனி முழுமைக்குமாக ஏறக்குரை 7500 யூதர்களின் வனிகத் தலங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஏறக்குறைய 400 சினாகோக் (யூத தேவாலயங்கள்) எரித்து அழிக்கப்பட்டன. இதே நாளில் 20,000க்கும் மேற்பட்ட யூதர்கள் concentration camps களில் அடைக்கப்பட்டனர்.

1989ம் வருடம் இந்த 9ம் திகதியில் கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் மேற்கு பெர்லினுக்கும் பொதுவாக மேற்கு ஜெர்மனிக்கும் செல்ல அனுமது அளித்து இரும்புக் கதவுகளை திறந்த நாள். இன்றைய ஜெர்மன் தலைமுறை மக்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு நாள்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் நினைவு கூறும் பல நிகழ்வுகள் ஜெர்மனி முழுதும் இன்றைக்கு ஏற்பாடாகியிருக்கின்றன. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து எழுதுகின்றேன்.

அன்புடன்
சுபா

Monday, November 8, 2010

தீப ஒளித் திருநாள் 2010

தீபாவளி நவம் 5ம் தேதி. இதற்கு அடுத்த நாளான 6ம் தேதி இங்கு ஸ்டுட்கார்ட் நகரில் தீப ஒளித் திரு நாள். என்ன ..ஸ்டுட்கார்ட்டில் தீபாவளியா என அதிசயிக்க வேண்டாம். இது Lichterfest என்றழைக்கப்படும் ஒரு விழா. அதிர்ஷ்டவசமாக நம் தீபாவளியும் ஸ்டுட்கார்ட் தீபத் திரு விழாவும் ஒன்றை அடுத்து ஒன்றாக இங்கு நிகழ்ந்தன.




ஸ்டுட்கார்ட்டில் பொதுவாகவே எப்போதும் மாலை 8 மணிக்கெல்லாம் கடைகள் மூடப்பட்டு விடும். ஆனானல் இந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு வரை கடைகள் திறந்திருந்தன. மக்கள் கூட்டம் அதிகரித்து மாபெரும் திரு விழா போல காட்சியளித்தது ஸ்டுட்கார் நகரின் மையச் சாலையான கூனிக் ஸ்ட்ராஸா. (அரச சாலை)

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தவை இரண்டு விஷயங்கள்.
1.பல இசைக் குழுக்கள் இந்த நிகழ்வில் ஆங்காங்கே பங்கெடுத்துக் கொண்டன.
2.சாலை எங்கும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் அலங்காரம்

சாலையின் பல இடங்களில் தீபம் போன்ற வடிவத்தில் மின்சார விளக்குகள் வைக்கப்படிருந்தன. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினரையும் கவரும் ஒரு விழாவாக இந்த நிகழ்வு ஏற்பாடாயிருந்தது தான் சிறப்பு.




ஆங்காங்கே கேளிக்கை நிகழ்ச்சிகள். கடைகள் குறிப்பாக மிகப் பெரிய துணிக்கடைகள், புத்தகக் கடைகள், எல்லாம் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.



அன்று மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்பாடாகியிருந்தன என்று குறிப்பிட்டேன் அல்லவா.



அதில்   நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் பொழுது போக்கு இசைக் குழுவின் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் ஒரே நாளில் ஏற்பாடாகியிருந்தன.


கார்ஸ்டாட் எனப்படும் வர்த்தக நிறுவனத்திலும் அதற்குப் பின்னர் காவ் ஓஃவ் என்ற வர்த்தக நிலையத்திலும் இரண்டு 30 நிமிட கலை நிகழ்ச்சியை இவர்கள் குழுபவினர் படைத்தனர்.


இவர்கள் குழுக்கள் மட்டுமல்லாது பல குழுக்கள் அன்று ஆங்காங்கே வாசித்துக் கொண்டிருந்தன. பினாங்கில் தைப்பூசத்தின் போது பக்கத்துக்கு பக்கம் பந்தல்களில் பாடல்கள் ஓட்டிக் கொண்டிருக்குமே.. அந்த ஞாபகம் தான் எனக்கு வந்தது இந்த மூலைக்கு மூலை கச்சேரியை பார்ப்பதற்கு.

பனிக் காலத்தின் குளிர் தொடங்கி விட்டாலும் கேளிக்கைகளின் எண்ணிக்கை குறைவதில்லை இங்கு. விரைவில் ஜெர்மனியில் பிரபலமான weihnachtsmarkt தொடங்கி விடும். கிருஸ்மஸ் திருநாளை முன்னிட்டு டிசம்பர் முதல் வாரமே இந்தச் சந்தை தொடங்கி விடும்.. அந்த செய்திகளுடன் மீண்டும் வருகின்றேன்.

அன்புடன்
சுபா