Saturday, April 25, 2020

கொரோணா தொற்று - ஐரோப்பிய நிலவரம்


25.4.2020

ஒட்டு மொத்தமாக விமானப் பயணங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு விமானச் சேவை நிறுவனமும் மீண்டு எழ அதனதன் நாடுகளின் நிதி உதவி கட்டாயம் தேவை. KLM, Air France இரண்டு விமானச் சேவை நிறுவனங்களுக்கும் நிதி உதவியை அதன் நாடுகள் வழங்க உள்ளன. ஜெர்மனி Lufthansa விமானச் சேவை நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்குவது பற்றி பரிசீலனையைத் தொடங்க உள்ளது.

பிரான்சில் மே 11ம் தேதி ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய திட்டங்களை அதன் முதலமைச்சர் Edouard Philippe வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வாசிக்க உள்ளார்.
ஸ்பெயினில் தற்சமயம் நிலமை சற்று முன்னேற்றம் கண்டிருப்பதால் மே 2ம் தேதி முதல் பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.


இன்று ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரிலும் தலைநகர் பெர்லினிலும் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களுக்குச் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதி தேவை எனப் போராட்டம் நடத்தினர். பெர்லினில் மட்டுமே 1000 பேர் கூடியிருக்கின்றனர். போராட்டக்காரர்கள் எங்களுக்கு எங்கள் வாழ்க்கை மீண்டும் வேண்டும் என முழக்கமிட்டனர். ஜெர்மனியின் சுகாதாரத்துறை இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என்ற போதிலும் இந்தப் போராட்டம் இன்று நடந்திருக்கின்றது. ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுக்கலாமே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.


ஜெர்மனியில் அங்காடிகள் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இயல்பாக இயங்குகின்றன. பள்ளிக்கூடங்கள் சிலமாநிலங்களில் கடந்த வாரம் தொடங்கப்பட்டு விட்டன. படிப்படியான ஊரடங்கு தளர்த்தும் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாடும் போது மாஸ்க் அணிந்து செல்வதை கட்டாயமாக்கியிருக்கின்றன எல்லா மாநிலங்களும்.
 
-சுபா

Wednesday, April 22, 2020

கொரோனா வைரஸ் antibody பரிசோதனை

நோய்த்தொற்று வீதங்களை மதிப்பிடுவதற்கும் வைரஸின் பரவலைக் கண்காணிப்பதற்கும் ஜெர்மனி பெரிய அளவிலான கொரோனா வைரஸ் antibody பரிசோதனையைத் தொடங்குகிறது.

இரத்தத்தில் உள்ள antibody ஒருவருக்கு வைரஸ் வந்து எதிர்ப்புசக்தி தோன்றி மறைந்ததற்கு அறிகுறியாகும். முழு நோய் எதிர்ப்பு சக்திக்கு இதனால் உத்தரவாதம் இல்லை என்றாலும் கூட மக்களுக்குக் குறைந்தபட்சம் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்பதை இதன் வழி அறியலாம். ஐரோப்பாவில் மிகப் பெரிய அளவில் இவ்வகை ஆய்வினை தொடங்கியிருக்கும் முதல் நாடாக ஜெர்மனி அமைகின்றது.

https://www.euronews.com/2020/04/19/germany-starts-mass-testing-for-coronavirus-antibodies-in-bid-to-learn-more-about-covid-19?fbclid=IwAR34ySA3LJgcG6U73VMzInkoHFN3CIrWncFSCt4PKKQV2zmJHTUaGVIXH9w

Tuesday, April 21, 2020

கொரோனா வைரஸ் தடுப்பூசி

பிரிட்டனில் வருகின்ற வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியின் சோதனைக்காக மனித மருத்துவ பரிசோதனை தொடங்க உள்ளது. பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த வியாழக்கிழமை மக்கள் மீது தடுப்பூசி ஒன்றை பரிசோதிக்கத் தொடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்-

மே மாத நடுப்பகுதியில் சுமார் 500 தன்னார்வலர்களிடம் இதைச் சோதிக்க திட்டம் உள்ளதாகவும் இச்சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், இன்னும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.