Tuesday, April 21, 2020

கொரோனா வைரஸ் தடுப்பூசி

பிரிட்டனில் வருகின்ற வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியின் சோதனைக்காக மனித மருத்துவ பரிசோதனை தொடங்க உள்ளது. பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த வியாழக்கிழமை மக்கள் மீது தடுப்பூசி ஒன்றை பரிசோதிக்கத் தொடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்-

மே மாத நடுப்பகுதியில் சுமார் 500 தன்னார்வலர்களிடம் இதைச் சோதிக்க திட்டம் உள்ளதாகவும் இச்சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், இன்னும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment