Monday, October 27, 2003

%Insurance%


சேன்சலர் ஷ்ரூடரின் Agenda 2010 திட்டமானது அமுலுக்கு வர வாய்ப்பே இல்லை என கங்கணம் கட்டிக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அனைவரையும் அமைதியடையச் செய்ய வைக்கும் வகையில் இந்த திட்டத்தின் ஒரு அங்கமான சுகாதார திட்டத்தின் மறு சீரமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த வெள்ளியன்று முழுமையாக இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட இந்த நிகழ்வு ஜெர்மனியின் சாதாரண மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


இந்த திட்டம் அமுலாக்கம் செய்யப்படும் போது, தற்பொழுது 14.3 சதவிகிதமாக இருக்கும் பொது இன்சூரன்ஸ் கட்டணம் 13.6 சதவிகிதமாகக் அடுத்த ஆண்டில் குறைக்கப்பட்டு பின்னர் 2006ம் வாக்கில் 12.15 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இதன் வழி ஏறக்குறைய 20 பில்லியன் EUR சேமிக்கப்படும் என அரசாங்கம் நம்புகின்றது. ஆனாலும் இந்த திட்டத்தின் வழி சில சிரமங்களும் பொது மக்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. முன்பு மருத்துவமனை செலவு முழுவதுமே இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலையில் விழுந்து விடும். ஆனால் இந்த திட்டம் வரும் போது, ஒரு சிறு பங்கினை நோயாளிகளும் ஏற்றுக் கொள்ளப்பட் வேண்டிய நிலை ஏற்படும்.

ஜெர்மனியில் ஒவ்வொரு நபரும் கட்டாயமாக சுகாதார இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸின் அடிப்படையில் தான் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில் யாரும் மருத்துவ சேவையைப் பெறமுடியாது. பற்பல சங்கடங்களை அனுபவித்த பின்னர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தான் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். இந்த நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களிடம் பணத்தைக் கறந்து விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ஒரு கனிசமான தொகையை இன்சூரன்ஸுக்காக அழ வேண்டியது நிர்பந்தமாகி விட்டது. என்ன செய்வது??

No comments:

Post a Comment