Tuesday, November 4, 2003

Autumn



நாளுக்கு நாள் குளிர் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இலையுதிர்காலம் முடிந்து குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதன் அறிகுறிகளைக் காணமுடிகின்றது.

இயற்கையின் சீரான ஓட்டத்தை இந்த நான்கு காலங்களான குளிர்காலம், வசந்த காலம், இலையுதிர்காலம், கோடைகாலம் இவை நான்கும் எந்த மாறுதலும் இன்றி ஒழுங்காக வந்து கொண்டிருப்பதைக் கொண்டே உணர முடிகின்றது.

இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று தானே. மரங்களெல்லாம் தீப்பிடித்து எறிவது போன்ற தோரணையில் வர்ணங்களெல்லாம் மாறி மஞ்சளாகவும், இளஞ்சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் மரங்களில் காட்சியளிக்கின்றன. இந்த இலைகளெல்லாம் மரங்களிலிருந்தும் கிளைகளிலிருந்தும் விழுவதற்கு ஏதுவாக ஏறக்குறைய தினமும் மழையும் பெய்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இலைகளில்லா மரங்களின் கிளைகள் மட்டும் தான் கண்களுக்குத் தென்படும்.

அடுத்த ஏப்ரல் வரை மரங்களின் பச்சை இலைக்காகக் காத்திருக்க வேண்டும். பகல் நேரமும் குறைந்து கொண்டே வருகின்றது. இப்போதெல்லாம் காலை 8 மணிக்குத்தான் பகலின் வெளிச்சத்தைப் பார்க்க முடிகின்றது மாலை 6 மணிக்கெல்லாம் மாலை இருள் சூழ்ந்து விடுகின்றது.

இன்னும் கொஞ்ச நாளில் 5 மணிக்கெல்லாம் இருள் வந்துவிடும். வெளிச்சத்தையே பார்க்க முடியாமல் அலுவலகத்திலேயே பொழுதைக் கழிக்கும் நாட்களில் ஒரு நாள் முடிந்தது என்ற பிரக்ஞையே இல்லாமல் போய்விடுகின்ற நிலையும் எனக்குச் சென்ற வருடங்களில் ஏற்பட்டதுண்டு. காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இயற்கையும் யாருக்காகவும் தனது நியதியிலிருந்து மாறாமல் தனது கடமைகளைச் செய்து கொண்டே இருக்கின்றது!

No comments:

Post a Comment