Thursday, August 8, 2019

லிக்ஸ்டஸ்டைன் அரண்மனை










அரண்மனைகளைச் சுற்றிப் பார்க்கச் சென்றாலே நாமும் அரசிதான் என்ற எண்ணம் வந்து விடுகின்றது 
நான் வசிக்கும் ஜெர்மனியின் பாடர்ன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் ஆங்காங்கே பல அரண்மனைகளும் கோட்டைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. பழமையான இந்தக் கோட்டைகளையும் அரண்மனைகளையும் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் எனக்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிகழ்ந்த பெரும் போர்களும் அவை ஏற்படுத்திய உயிர் இழப்புக்களும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.
அத்தகைய ஒரு அரண்மனைதான் லிக்ஸ்டஸ்டைன் அரண்மனை. கிபி.12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த அரண்மனை. இதனை உருவாக்கிய சிற்பி Carl Alexander Heideloff . அவ்வப்போது சில மேம்பாடுகள் செய்யப்பட்டாலும் இதன் பழைய வடிவம் இன்றும் அழகுடன் காணப்படுவது சிறப்பு. இந்த அரண்மனையில் இன்னமும் மன்னர் பரம்பரையினரின் வாரிசுகள் ஒரு பகுதியில் வாழ்கின்றார்கள்.
சுவேபிய பள்ளத்தாக்கைச் சார்ந்த வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகையும் இதனைச்சுற்றியுள்ள கட்டிடங்களும் கண்களைக் கவரும் கட்டுமான அமைப்புடன் அமைந்துள்ளன.
கடந்த வார இறுதியில் நண்பர்கள் ஸ்ரீகந்தா மற்றும் டாக்டர்.அருணி குடும்பத்தினருடன் இங்கு சென்று வந்தபோது எடுத்த சில புகைப்படங்கள் இவை. ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியின் தொடக்கும் இங்கிருந்து உருவாகின்றது என்பது தனிச்சிறப்பு.
-சுபா

No comments:

Post a Comment