Thursday, March 28, 2013

சைக்கிள் நகரம்


பெரிய நகரங்களில் சைக்கிள் பயன்பாடு சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஏன் முடியாது என வியக்க வைக்கும் நகரம் ஆம்ஸ்டெர்டாம். நெதர்லாந்தின் தலைநகரம் எனபதோடு இந்த நாட்டின் மிகப் பெரிய ஒரு நகரமாகவும் இது இருக்கின்றது.

மூன்று நாட்களுக்கு முன்னர் திங்கட்கிழமை அலுவல் நிமித்தம் ஆம்ஸ்டெர்டாம் சென்றிருந்தேன். என் காரிலேயே பயணம். எனது இல்லத்திலிருந்து 630 கிமீ வட மேற்கு நோக்கிச் செல்ல வேண்டும். பணி கொட்டிக் கொண்டிருந்ததால் 7 மணி நேர பயணமாகியது. ஆம்ஸ்டர்டாமில் வெயில் 9 டிகிரி வரை சீதோஷ்ணமும் பயங்கரக் காற்றும் ஒரு வகை வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இரண்டு நாட்களும் அலுவலகத்தில் மீட்டிங்கில் மூழ்கிப் போனாலும் மாலையில் ஆம்ஸ்டெர்டாம் நகரைச் சற்று சுற்றி வரவும் இரவு உணவுக்குச் செல்லவும் வாய்ப்பமைந்ததில் ஆம்ஸ்டெர்டாம் நகர் மத்தியில் சில மணி நேரங்களை செலவிட முடிந்தது.



இது எனக்கு ஆடர்டாமிற்கான இரண்டாவது பயணம். எனது முதல் பயணத்திலும் நகரம் முழுக்க சைக்கிள் பயணிகள் அங்கும் இங்குமாக வாகனங்களுக்கும் பஸ்களுக்கும் மத்தியில் பயணிப்பதைப் பார்த்து  ரசித்திருக்கின்றேன். இம்முறை நானே வானமும் ஓட்ட வேண்டிய நிலை என்பதால் மிக மிக கவனமாகவே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டியதாயிற்று.



எங்கிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கவே முடியாத வகையில் முன்னும் பின்னும் அங்கும் இங்குமெனெ எங்கும் சைக்கிள் பயணிகள். ஈசல்கள், ஈக்கள் போல பறந்து வரும் அவர்கள் வாகனத்தில் செல்வோருக்கு மட்டுமல்ல சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் சவால்தான்.

சீஸ் கடைக்கு முன்னர் சைக்கிள்

ஆனால் இவையெல்லாம் அவ்வப்போது வந்து செல்பவர்க்ளுக்குத்தான் பிரச்சனை என்பதும் உள்ளூர் மக்கள் சைக்கிள் பயணத்திற்கும் சைக்கிள் பயணிகளுக்கும் பழகியவர்கள் என்பதும் நன்கு தெரிகிறது.

நகரின் எந்த மூலையைப் பார்த்தாலும் சைக்கிள்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. இங்கே அலுவலகத்திற்கு வருபவர்கள் சைக்கிளில் வருவதை ட்ஸ்டேட்டஸ் குறைவாகக் கருதும் நிலையில்லை. மாணவர்கள் இளைஞர்கள் என குறிப்பிட்டதொரு வரையறை என இல்லாமல் எல்லோருமே, எல்லா வயதுக்காரர்களும் சைக்கிள்களில் பயணிக்கின்றனர்.

மலைகள் இன்றி சம தரையாக இருக்கும் நிலை சைக்கிள் பயணிகளுக்கு பயணத்தை அலுப்பில்லாமல் சுலபமாக்குகின்றது. பெரிய நகரத்திற்குள் வாகனத்தை எடுத்துச் சென்று பார்க்கிங் செய்து அதற்குப் பணம் கட்டிப் போக வேண்டுமே என்ற நிலையும் இல்லை. ஆக எல்லா வகையிலும் சுலபமான ஒரு வாகணமாக சைக்கிள் இங்கே அமைந்திருக்கின்றது.

அடுத்த முறை ஆம்ஸ்டெர்டாம் செல்ல நேரும் போது இங்கே வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓட்டிச் சென்று வர வேண்டும் என்று அங்கிருந்த வேளையில் நினைத்துக் கொண்டேன்.

மேலும் ஆம்ஸ்டெர்டாமின் சில படங்கள்...

windmill



சாலையில் பயணம்

இலை உதிர்த்து நிற்கும் மரங்கள்


நகருக்குள் ட்ராம், பஸ் பொதுப் போக்குவரத்து

Rijks Museum

புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள்

Rijks Museum சுவர் ஓவியம் ஒன்று  - 15ம் நூற்றாண்டு 


நகருக்குள் நதிகளுக்கிடையே பழமையான கட்டிடங்கள்



நிஜமான உடும்பு இல்லை..:-)




டூலிப் மலர்கள் மலரத் தொடங்கி விட்டன

சீஸ் கட்டிகள் - கௌடா வகை

வெவ்வேறு சுவைகளில் மஃப்பின் வகைகள்



அன்புடன்
சுபா




No comments:

Post a Comment