Wednesday, December 31, 2003

EU Presidency


இந்த 2003ல் இத்தாலி ஜெர்மனி இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது ஐரோப்பிய நாடுகளிடையே கவலையளிக்கும் ஒரு விஷயமாகி இருக்கின்றது.

இத்தாலியின் சில்வியோ பெர்லுச்கோனி, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவத்திலிருந்து விலகுகின்றார். மற்ற முந்தைய தலைவர்களோடு ஒப்பிடுகையில் இவரை பலரால் வெகு நாட்களுக்கு நிச்சயமாக மறக்க முடியாது; இந்த புகழ் அவரது திறமையான (??) வழி நடத்தலுக்காக
அல்ல; மாறாக அவரது தலைமைத்துவத்தின் போது அவரது பேச்சு ஜெர்மானியர்களைப் பாதித்த அளவிற்கு இதுவரை வேறு எப்போதும் நடந்ததில்லை.

தனிப்பட்ட முறையில், செல்வந்தரான பெர்லுச்கோனி, இத்தாலியின் பல முக்கிய தொலகாட்சி நிறுவனங்களை தனது கையில் வைத்திருப்பவர். power of media எந்த அளவிற்கு ஒருவரது செல்வாக்கை உயர்த்தி வைக்கும் என்பதில் இவரும் ஒரு நல்ல உதாரணம் என்று தாராளமாகச்
சொல்லலாம். தமிழகத்திலும் இந்த நிலைதானே இருக்கின்றது. அரசியல்வாதிகள் கைகளில் வானொலி தொலைகாட்சி நிலையங்கள் மாட்டிக் கொள்ளும் போது சுய விளம்பரம் செய்வதற்கு வேறு யாரையும் நாட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லையே!



EU Parliment நடந்து கொண்டிருக்கும் போது பெர்லுச்கோனி ஜெர்மனியின் மார்ட்டின் சூல்ஸ் என்ற அரசியல்வாதியை நாஸி அங்கத்துவராக வைத்து பேசிய வார்த்தைகளை ஜெர்மானியப் பத்திரிக்கைகள் இன்றைக்கும் விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

"Mr. Schulz, I know there is in Italy a man producing a film on the Nazi concentration camps, I'd like to suggest you for the role of guard. You'd be perfect." மார்ட்டின் பெர்லுச்கோனியைக் கடுமையாக விமர்சனம் செய்தமைக்காக இந்த தனிப்பட்ட தாக்குதலை பொது மேடையில் முன்வைத்தார் பெர்லுச்கோனி. இவர்கள் இருவருமே பின்னர் தங்கள் அத்துமீறிய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் பத்திரிக்கைகள் இதனை சும்மா விட்டு விடவில்லை. மனித உறிமை மீறல், தனிப்பட்ட தாக்குதல், அடிமை மனப்பான்மை என வர்ணித்து பெர்லுச்கோனியை இன்றளவும் புகழ்பாடிக் கொண்டே தான் இருக்கின்றன.

அதற்குப் பிறகு, இத்தாலிக்குச் செல்லும் ஜெர்மானிய சுற்றுப் பயணிகளை விமர்சித்தும் ஒரு பேச்சு வளர அதைக் கண்டு ஜெர்மானிய அதிபர் தனது இத்தாலிய உல்லாசப்பயணத்தை ரத்து செய்ததும் மற்றொரு கதை. (எனது முந்தை செப்டம்பர் மாத பதிவுகளில் இதனைக் காணலாம்.)

பெர்லுச்கோனி, அவரது தலைமைத்துவத்துவத்தின் போது எந்த புதிய முயற்சியையும் செய்யவில்லை என்பது மற்ற அங்கத்துவ நாடுகளின் தலைவர்களின் பேச்சாகி போயிருக்கின்ற இந்த காலகட்டத்திலும், தான் மிக அதிகமாகவே சாதித்து விட்டதாக பெருமை பேசிக்
கொண்டிருக்கின்றார் பெர்லுச்கோனி. அடுத்த தலைவர் எந்த அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமையை வளர்க்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment