Wednesday, December 13, 2017

பாலஸ்தீனம் கிழக்கு ஜெரூசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவித்துள்ளது

மத்திய கிழக்கில் குழப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அமெரிக்க சிந்தனை மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றது.
ட்ரம்பின் ஜெரூசலம் தொடர்பான அறிவிப்பை அடுத்து பாலஸ்தீனம் கிழக்கு ஜெரூசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவித்துள்ளது. 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினராகக் கொண்ட Organization of Islamic Cooperation (OIC) இன்று கிழக்கு ஜெரூசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவித்ததுடன் மத்திய கிழக்கின் அமைதி பேச்சு வார்த்தை முயற்சிகளிலிருந்து அமெரிக்காவை வெளியேறச் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளன. அதே வேளையில் ட்ரம்பின் அறிவிப்பை செல்லாது என்றும் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளன. இந்த அவசரக் கூட்டம் துருக்கியில் அதன் அதிபர் எர்டோகானால் ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்துள்ளது.
இந்த நிகழ்வுகளெல்லாம் விரைவில் மத்திய கிழக்கில் போர் ஏற்படக் கூடிய சாத்தியங்களை முன் வைக்கின்றன.
அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கு பலியாகும் மத்திய கிழக்காசிய நாடுகள் இதனையும் சற்று சீர் தூக்கிப் பார்க்கலாம்.
-சுபா

No comments:

Post a Comment