Monday, June 17, 2013

ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா

ஜெர்மனி ஸ்டுட்கார்ட் பாட்கண்ஸ்டாட் ஸ்ரீ சித்தி விநாயகர்  ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெற்றது. ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பட்டு இரண்டு மணி நேரங்கள் சாலையைச் சுற்றி வரும் வகையில் மிகச் சிறப்பாக ஊர்வலம் நிகழ்ந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். இலங்கைத் தமிழ் மக்களோடு உள்ளூர் ஜெர்மானிய மக்களும் சிலர் இண்டஹ் தேர் திருவிழாவைப் பார்க்க சாலையில் கூடியிருந்தனர்.

அம்பிகை, நல்லூர் முருகன், சித்தி விநாயகர் சிலைகள் மூன்று தேர்களில் வரிசையாக பவனி வந்தன. தேங்காய் உடைத்தும் பூஜைகள் செய்தும் வரும் வழியில் பூஜைகள் நடந்து கொண்டேயிருந்தது.

பல நாட்கள், சில ஆண்டுகள் சந்திக்காத இலங்கைத் தமிழ் நண்பர்கள் பலரை மீண்டும் சந்தித்து அளவலாவும் வாய்ப்பும் அமைந்தது.

ஆலயத்தில் வாசல்பகுதியிலேயே கடைகள் ஏற்படுத்தி நம் மக்கள் பயன்படுத்தும் மொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். புளி சாதம், தேங்காய்சாதம் எல்லாம் இல்லை. மாறாக சைவ கொத்து ரொட்டி, வடை, ஆப்பம் என உணவுப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன.

சில படங்கள்..

சுவாமி ஊர்வலம் மூன்று தேர்களில் 




தீச்சட்டி ஏந்திய பெண்கள்


காவடியுடன் சிறுவர்கள்


தேரினை வரவேற்கும் காவடியாட்டம்



தீப்பந்ததுடன்


என் நண்பர்களுடன்



என் நண்பர்களின் கடை(சாந்தா,மூர்த்தி)



சில கடைகள்

நாதஸ்வர கோஷ்டி


காவடியாட்டம்



பால்குடம் ஏந்திய மகளிர்



சித்தி விநாயகர் வரும் தேரின் வடத்தை ஒரு புறம் பெண்களும் மறுபுறம் ஆண்களும் இழுத்து வருகின்றனர்

சுபா

No comments:

Post a Comment