Saturday, January 3, 2004

Cannibal ..??

உணவு சாத்விகமாக இருக்க வேண்டும்; அப்போதுதான் மனமும் பக்குவப்படமுடியும் என்ற பாரம்பரியத்தில் வருகின்ற நமக்கு அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஜெர்மனியில் மனிதர்களைச் சாப்பிடும் ஒருவரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். அவரது பெயர் 'Armin Meiwes'. காவலர்களிடம் மாட்டிக்கொண்ட பின்னர் தனது தவறுகளை ஒத்துக் கொண்டிருக்கின்றார் இந்த மனிதர்.

ஏறக்குறைய 30 விழுக்காட்டு ஜெர்மன் மக்கள் சைவ உணவு விரும்பிகளாக இருக்கின்ற இந்த காலத்தில் 'இடி அமினின்' வழியைக் கடைப்பிடிக்கும் இந்த வகை மனிதர்களைப் பற்றி என்ன நினைக்க முடியும்?

இந்த மனிதர் தனது உணவாக்கிக் கொண்ட மனிதர்களை இண்டெர்நெட் மூலமாகத்தான் வலை விசிப் பிடித்திருக்கின்றார். காசல் நகரில் வாழும் இவர் பெர்லின் நகர மனிதர் ஒருவரைச் சாப்பிட்டதற்காகப் பிடிபட்டிருக்கின்றார்.

சக மனிதர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் வந்துகொண்டிருக்கின்றது என்பதற்கான அடையாளங்களா இவை?
இந்த செய்தியைப் பற்றி மேலும் அறிய http://www.dw-world.de/english/0,3367,1432_A_1078601_1_A,00.html !

No comments:

Post a Comment