Saturday, December 15, 2018

BREXIT...தொடர்ச்சி..




கடந்தசில நாட்கள் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நிறைந்த நாட்களாக முடிந்திருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டத்தைச் சரியாக விளக்கவில்லை என்பதே இப்போதிருக்கும் பெரிய பிரச்சனையாக அமைகின்றது.

பிரிட்டனின் BREXIT வெளியேற்றம் என்பது பிரிட்டனோடு சட்டப்பூர்வமாக இணைந்திருக்கும் அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளையும் பாதிப்பதைத் தவிர்க்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அயர்லாந்திடமிருந்து வட அயர்லாந்து எல்லை தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் இதன் வழி தெளிவு படுத்தப்படாமல் இருப்பது காரசாரமாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கின்றது.



பெல்ஜியம் பிரதமர் சார்ல்ஸ் மிஷேல் மிகுந்த காலதாமதமாக்கிக் கொண்டிருக்கும் பிரிட்டனிடம் இனி கலந்துரையாடலுக்கும் அனுகூலங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கும் இடமில்லை என நேற்று தெரிவித்திருக்கின்றார்.



ஜெர்மனி சான்சலர் அங்கேலா மெர்க்கல், இனி அனுகூலங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றியம் உதவவே விரும்புகின்றது என நேற்று குறிப்பிட்டிருக்கின்றார்.



இத்தனை களேபரமான சூழலில் பிரிட்டன் சரியான முடிவினை எடுக்க வேண்டும். எப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எத்தகைய சட்டங்களின் வரையறைகளின் அடிப்படையில் வெளியேறுகின்றோம் என்று தெளிவாகக் கூற வேண்டும். ஆனால் இது வரை அது நடைபெறவில்லை.



இந்த சூழலில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி ப்ளேர் மற்றொரு கருத்தை முன் வைத்திருக்கின்றார். BREXIT பற்றிய மாற்று கருத்தை முன் வைப்பது என்பதே அது. மக்களிடம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவோம். பிரிட்டன் மீண்டும் யோசித்து இந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றிய முடிவு எடுக்க வாய்ப்பு தருவோம் என்பதே அது.



மக்களும் இந்த அடிப்படையில் மாற்று யோசனையை விரும்புவதாகவே தெரிகிறது.


https://www.dw.com/en/former-british-pm-blair-calls-for-second-brexit-referendum/a-46741013


-சுபா

No comments:

Post a Comment