Tuesday, October 2, 2018

ஜெர்மனி - கிழக்கும் மேற்கும் இணைந்த போது..


ஜெர்மனி என்ற ஒரு பேரரசு இரண்டாம் உலகப்போருக்குப் பின் அனுபவித்த துன்பங்களைப் பொதுவாக யாரும் பேசுவதில்லை.
உலக அளவில் நாசி சித்தாந்தம் ஹிட்லர் என்ற ஒரு தனிமனித விளக்கங்களுடனேயே அடங்கிவிடுகின்றனவேயன்றி 1949க்குப் பின்னர் கிழக்கு ஜெர்மனி நாட்டோவின் கட்டுப்பாட்டில் இருந்த போது கிழக்கு ஜெர்மனி மக்களும் மேற்கு ஜெர்மனி மக்களும் உறவினர்களையும் நண்பர்களையும் கூட வந்து பார்க்க முடியாத ஒரு கடும் சூழல் நிலவியது.

மக்கள் கிழக்கிலிருந்து மேற்கு வர தங்கள் உயிரைப் பணையம் வைத்து செயல்பட்டனர். கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி வர போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் வழியாக வந்து பின் மேற்கு ஜெர்மனிக்கு வந்தனர். வழியில் பிடிபட்டோர் கொடூரமான தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.

இன்று ஜெர்மனியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நாட்டோவின் ஏனைய உறுப்பு நாடுகள் வெளியேறிவிட்டாலும் அமெரிக்கா மட்டும் முற்றிலுமாக வெளியேறவில்லை. ஜெர்மனியின் சில நகரங்களில் அமெரிக்க ராணுவத்தின் முகாம்கள் இன்றும் இருக்கின்றன.

ஆனால் ஜெர்மனியின் கடந்த 40 ஆண்டு கால வளர்ச்சி அபரிதமானது. உலக அளவில் வளர்ச்சியில் மிக உயரிய நிலையில் இன்று ஜெர்மனி விளங்குகின்றது என்பதோடு உலக அளவில் இன்று அகதிகளுக்கு புகலிடும் தரும் நாடுகளில் பட்டியலில் முதல் சில நாடுகளில் இடம் பிடித்திருக்கின்றது.

ஐரோப்பாவின் இன்றைய பொருளாதார பலம் பொருந்திய வல்லரசு ஜெர்மனி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1989ம் ஆண்டு .. மக்கள் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை.
பெர்லின் சுவற்றை உடைத்தனர். காவலை மீறி முள் கம்பிகளைப் பிய்தெறிந்து ஏறிக்குதித்து மேற்கு ஜெர்மனி நோக்கி ஓடிவந்தனர். தொடர்ச்சியாக ஜெர்மனி 1989 பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்தது.

1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் நாள் - கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்தது. கிழக்கு ஜெர்மனி மக்கள் பெர்லின் சுவற்றைத் தாண்டி மேற்கில் கால் வைத்தனர். மேற்கில் இருந்தவர்கள் ஓடிவந்து அணைத்துக் கொண்டனர். உணர்ச்சிகள் மட்டுமே உலவிய ஓர் இரவு அது.

ஒன்றிணைந்த ஜெர்மனி அன்று பிறந்தது.

அந்த மகத்தான நாள் நாளை அக்டோபர் மாதம் 3ம் தேதி.

நாளை மேலும் சிலதகவல்கள் பகிர்கிறேன்.



-சுபா

No comments:

Post a Comment