Thursday, May 2, 2013

சாம்பியன் லீக் 2013 (2)


என் கணிப்பை பொய்யாக்காமல் எஃப்சி பாயார்ன் குழு பார்சலோனாவை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் நேற்று தோற்கடித்து வெம்ப்ளியில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தயாராகி விட்டது.

இறுதிப் போட்டியில் பொருஸியா டோர்ட்முண்டும்  எஃப்சி பாயார்ன் குழுவும் மோத உள்ளன. இரண்டுமே ஜெர்மானியக் குழுக்கள். இறுதிப் போட்டியில் இரண்டு ஜெர்மன் குழுக்கள் கலந்து கொள்வது இங்கே பெறும் மகிழ்ச்சியைஏற்படுத்தியிருக்கின்றது. 2வது தொலைகாட்சி நிறுவனமான ZDF நேற்று இரவு விளையாட்டு முடிந்து பின்னர் தொடர்ந்து நடக்கவிருக்கும் போட்டி பற்றிய விவரணைகளிலேயே  இரவை கழித்தது. 

நேற்றைய விளையாட்டின் சில சிறப்பு செய்திகள் படங்களுடன்.

Inline image 1
எஃப்சி பாயார்ன் குழு முதல் கோல் போட்ட ரோபன். அவரை கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் மகிழும் குழுவினர்.


Inline image 2
எஃப்சி பாயார்ன் குழுவுக்கான இரண்டாவது கோலை தவறுதலாக  உதைத்தவர் பார்சலோனாவின் பீக். இதை யாரால் நம்ப முடியும்? ஆனாலும் நடந்து விட்டது. தலையைக் கவிழ்ந்து கொண்டே பீக் நடந்து சென்றதும் ஏனைய குழுவினர் தலையில் கையை வைத்துக் கொண்டு பார்தத்தும் பார்சலோனா குழுவினருக்கு ஒரு சோகம் தான்.

Inline image 3
பார்சலோனாவின் புகழ் மிக்க விளையாட்டாளரான மெஸ்ஸி போட்டியில் முதல் 11 விளையாட்டளர்களில் நேற்று இடம் பெறவில்லை. பின்னால் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இவர் போட்டியில் நுழைந்திருந்தால் குழுவினருக்கு பாதி பலம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாம் என காற்பந்து வர்ணனை செய்தவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார். மெஸ்ஸி நுழைந்திருந்தால் கூடுதல் 1 கோல் போட்டிருக்கலாம். அவ்வளவுதான்....!

Inline image 4
மூன்றாவது கோலைப் போட்ட முல்லர். அவரைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளும் குழுவினர்.



Inline image 5
நேற்றைய நிகழ்வின் கதா நாயகன் மனுவெல் நோயர். ஜெர்மனியின் எஃப்சி பாயார்ன் குழு மட்டுமல்லாது ஜெர்மனியின் நேஷனல் டீமின் கோல்கீப்பர். பார்சலோனா குழு வின்எந்த பந்தையும் விடாமல் பிடித்து சாகம் செய்து அசத்திவிட்டார்.

சுபா

No comments:

Post a Comment