Wednesday, May 27, 2015

கோடையில் ஸ்டுட்கார்ட் - 2 கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக் கொண்டாட்டம்

கார்ல்ஸ்ரூஹ (Karlsruhe) நகரம் நான் வசிக்கும் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறை வடக்கு நோக்கி 45 கிமீ தூரத்தில் உள்ளது. சென்ற வாரம் எங்கள் உறவினரை பார்த்து விட்டு வரும் வழியில் இங்குள்ள ஒரு அரண்மனையை பார்த்து வரலாம் எனச் சென்றிருந்தோம்.



அரண்மனைக்கு பக்கத்தில் "பழங்கால மக்கள் திருவிழா" ஒன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரண்மனையைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததால் அந்தப் பழங்கால மக்கள் திருவிழாவிற்குச் செல்லவில்லை.

அதற்கு பதிலாக கார்ல்ஸ்ரூஹ நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் தினம் (Volksfest) நகரின் மையப் பகுதியில் அரண்மனைக்கு எதிர்புரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த மக்கள் தின விழாவில் கலந்து கொண்டோம்.

இந்த மக்கள் தின கொண்டாட்டம் என்பது அந்த நகரத்து சற்று பழமையான கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள். இவ்வகை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஒரே வகையான ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகளான Bratwürst (sausages), Pommes (french fries), கால்ஸ்ரூஹ நகரத்திற்கே சிறப்பான பியர் அதோடு கோடையில் மக்கள் விரும்பும் ஐஸ்க்ரீம், வேறு சில தின்பண்டங்களும் விற்பனைக்கு இருந்தன.

முக்கியமாக எல்லா கொண்டாட்டங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடப்பது உறுதி. நாங்கள் சென்ற சமயத்தில் கால்ஸ்ரூஹ பாரம்பரிய இசைக்குழுவினர் (musikkapelle) இசை நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.



இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திந்ருந்த பொது மக்கள் சாதாரண உடைகளோடு ஒரு சிலர் 19ம் நூற்றாண்டு, 20 நூற்றாண்டு ஆரம்ப கால உடைகளை ஞாபகம் கூறும் வகையில் உடையணிந்தும் வந்திருந்தனர். இவ்வகை நிகழ்ச்சிகளில்தான் இந்த பழமையான ஆடைகளைக் கிராமிய ஆடைகளைக் காண முடியும்.


(நின்று கொண்டிருக்கும் பெண்கள் கிராமிய உடை அணிந்திருக்கின்றார்கள்)


மேலே படத்தில் உள்ள அரண்மணை 1749-81ல் கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மிகப் புதிய நகரங்களில் கார்ல்ஸ்ரூஹவும் ஒன்று. இந்த நகரம் 1915 வாக்கில் உருவானது. அரசர் கார்ல் வில்ஹெல்ம் அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டது. அரண்மனைக்கு சற்று தள்ளி கார்ல்ஸ்ரூஹ நகர மையத்தில் அரசரின்´உடல் தகனம் செய்யபப்ட்டு ஒரு பிரமிட் வடிவிலான நினைவு மண்டபமும் வைக்கப்பட்டுள்ளது.



இந்தப் பகுதியில் உள்ள வீடியோ கிளிப் ஒன்றினைப் பாருங்கள்.



குழந்தைகளைக் கவரும் இனிமையான இசையையும் அதனை இசைக்கும் கலைஞரையும் இங்கு காணலாம்.

அன்புடன்
சுபா

Friday, September 5, 2014

கில்லெர்ஸ்பெர்க் செவ்வந்தி மலர்கள் கண்காட்சி

ஸ்டுட்கார்ட் கில்லெர்ஸ்பெர்க் பூந்தோட்டத்தில் இருக்கும் செவ்வந்தி மலர்களின் கண்காட்சிப் பகுதியில்...
சென்ற வாரம் சனிக்கிழமை நான் சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்கள்.​

இங்கு கோடை செவ்வந்தி மலர்களின் வருகையில் புதுப் பொலிவுடன் இருக்கின்றது.. கடந்த சில நாட்கள்  மேகமூட்டமாகவும் மழையாகவும் இருந்து இன்று மீண்டும் சூரியன் வெளியே தலை காட்டிக் கொண்டு வந்து விட்டது. நாளை ஓரளவு நல்ல வெயிலை எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

சில படங்கள்.. 

Inline image 1




Inline image 2



Inline image 3



Inline image 4


Inline image 5


Inline image 6


Inline image 7



Inline image 8


Inline image 9



Inline image 10


Inline image 11


Inline image 12



Inline image 13


Inline image 14




Inline image 15


Inline image 16

​சுபா​

Sunday, August 10, 2014

ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா - 2014

கோடை காலம் ஸ்டுட்கார்ட் நகருக்குத் தனி பொலிவை எப்போதும் கொண்டு வந்து விடும். பார்க்கு மிடமெங்கினும் மலர்கள்.. வர்ண வர்ன ஆடைகளில் மக்கள்.. ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள். இப்படி மனம் கவரும் அம்சங்கள் ஸ்டுட்கார்ட் நகரில் கோடை காலச் சிறப்பாக அமைந்து விடும்.
ஸ்டுட்கார்ட் அருகாமையில் உள்ள கிராமங்கள் ஏராளம். ஒவ்வொன்றிலும் வார இறுதி நாட்களில் சாலை திருவிழாக்கள் நடைபெறும். இவை அனைத்தையும் விட மிகச் சிறப்பாக அமைவது ஸ்டுட்கார்ட் கோடை விழா. கடந்த 4 நாட்களாக ஸ்டுட்கார்ட் அரச மாளிகை உள்ள பகுதியில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நேற்று மாலை நான் இத்திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். சில புகைப்படங்கள்.






Inline image 1


Inline image 2


Inline image 3


Inline image 4


Inline image 5


Inline image 7



Inline image 6


Inline image 8


Inline image 9

Wednesday, July 9, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

​​ .. Ein historischer Sieg..!
.......Ein historisher Rekord..!

இங்கு நேற்று இரவு போட்டி முடிந்ததிலிருந்து இந்த வார்த்தைகளைதான் அதிகம் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்து இவ்வாண்டு உலக காற்பந்து போட்டியில் ஒரு சாதனையை ஜெர்மனி செய்து இறுதிச் சுற்றுக்குச் செல்கின்றது.

நினைத்துப் பார்க்கவே இல்லை.

11ம் நிமிடத்தில் தோமஸ் மூல்லரின் முதல் கோல்.. அதன் பின்னர் மீரஸ்லாவ் க்லோஸாவின் 2வது கோல் அடுத்த 9 நிமிடங்களில்.. அடுத்த 3 நிமிடத்தில்  டோனி க்ரூஸின் 3ம் கோல் அடுத்த  2ம் நிமிடத்தில் க்ரூஸின் அடுத்த கோல்.. அடுத்த 7ம் நிமிடத்தில் கடீராவின் கோல் என அடுத்தடுத்து கோல் போட்டு பிரேசிலின் அணியை நிலை தடுமாற வைத்து விட்டது ஜெர்மனி அணி.  முதல் 45 நிமிடத்திலேயே 5  கோல்கள்.

2ம் பகுதி பிரேசிலின் கடுமையான எதிர்ப்புடன் தொடங்கினாலும் மீண்டும் ஷூலரின் ஒரு கோலும் மூல்லரின் 2ம் கோலும் ஜெர்மனியை வெற்றிப்பாதையிலேயே வைத்திருந்தது. 

16 முறை பிரேசிலின் அணி கோல் போட முயன்றும் அனைத்தையும் லாவகமாக தடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபித்து விட்டார் ஜெர்மனியில் கோல் கீப்பர் மானுவேல் நோயர். ஆயினும் இறுதியில் பிரேசில் ஒரு கோல் போட்டு உள்ளூர் மக்களின் அழுகைக்கு ஒரு ஆறுதலை தேடித்தந்தது என்று சொல்லலாம்.

ஆக ஒரு வழியாக இறுதிச் சுற்றுக்கு வந்து விட்டது ஜெர்மனி.. இங்கே மகிழ்ச்சி எல்லா இடங்களிலும்..  வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.. 

ஜெர்மனி மோதப் போவது நெதர்லாந்தா அல்லது அர்ஜெண்டீனாவா என்பது இன்று தெரிந்து விடும்..

சில படங்கள்


ஜெர்மன் அணி


Inline image 8
மூல்லர்

Inline image 2
க்ரூஸ்


Inline image 3
க்ளோஸ



Inline image 5
ஷூலர் + க்ளோஸ


Inline image 7
நோயர்



Inline image 6
பொது மக்கள்.. மகிழ்ச்சியில்..

Tuesday, July 8, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

Inline image 1


பிரேசில் மக்களின் முழு ஆதரவும் பிரேசில் குழுவுக்கே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கவனம் சிதறாமல் ஜெர்மனி குழு இன்று விளையாடி வெற்றி பெற வேண்டும். இது மிகச் சிரமமான காரியம் தான். ஆனாலும் ஜெர்மனி வெற்றி கிட்டும் என எதிர்பார்க்கிறேன். 

Sunday, July 6, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

நேற்று அபாரமாக விளையாடியது ​கோஸ்டா ரிக்கா. மலைத்து போனேன். டச்சு அணி எவ்வளவு திறமை வாய்ந்தது.. அணுபவம் வாய்ந்தது.. முதல் 90 நிமிடத்ல் ஒரு கோல் கூட போட முடியாமல் செய்ததோடு 15 நிமிட நீட்டிப்பு இரு முறை கொடுத்தும் கூட  நெதர்லாந்து அணிக்கு கோல் போட வாய்ப்பையே கொடுக்காத இவர்கள் நேற்று அனைவரையும் வியக்க வைத்தனர் என்று சொல்வேன்.

டச்சு அணியில் ரூபன், ஷ்னைடர் இருவரும் இல்லையென்றால் முதல் 45 நிமிடத்திலேயே கோஸ்டா ரிக்க குழு 2 கோல்களைப் போட்டிருக்கும் என்பது உறுதி.

எனது பாராட்டுக்கள் கோஸ்டா ரிக்கா குழுவினருக்கே.. அதிலும் குறிப்பாக கோல் கீப்பருக்கும்.. கொன்ஸாலஸுக்கும்.


The defender is delighted to have increased his nation's footballing profile at the World Cup in Brazil
Giancarlo Gonzalez says Costa Rica have achieved their World Cup goal of alerting a wider audience to their country's football.
Few expected Jorge Luis Pinto's men to cause much of a stir in Brazil and that was even before they were drawn into a tough Group D alongside Uruguay, Italy and England....

Monday, June 30, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

இன்றைய விளையாட்டில் ஜெர்மனி அல்ஜீரியாவுடன் மோதுகின்றது. இன்னம் 4  மணி நேரத்தில் விளையாட்டு தொடங்கப்பட உள்ளது. அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பும் வழியில் சாலையில் கார்கள் பல ஜெர்மானிய கொடி தூக்கிக் கொண்டு பறப்பதை பார்த்துக் கொண்டே வந்தேன். 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெறலாம் என நினைக்கின்றேன்.

2 நாட்களுக்கு முன்னர் கொலம்பியா-உருகுவே போட்டியில் கொலம்பியா மிக சிறப்பாக விளையாடியது. யார் இறுதியில் வெற்றியாளர் என்ற பட்டத்தை பெற்று உலகக் கோப்பையைப் பெறப் போகின்றார் என்பது கேள்விக் குறியாகவே இப்போது இருக்கின்றது.