Sunday, August 10, 2014

ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா - 2014

கோடை காலம் ஸ்டுட்கார்ட் நகருக்குத் தனி பொலிவை எப்போதும் கொண்டு வந்து விடும். பார்க்கு மிடமெங்கினும் மலர்கள்.. வர்ண வர்ன ஆடைகளில் மக்கள்.. ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள். இப்படி மனம் கவரும் அம்சங்கள் ஸ்டுட்கார்ட் நகரில் கோடை காலச் சிறப்பாக அமைந்து விடும்.
ஸ்டுட்கார்ட் அருகாமையில் உள்ள கிராமங்கள் ஏராளம். ஒவ்வொன்றிலும் வார இறுதி நாட்களில் சாலை திருவிழாக்கள் நடைபெறும். இவை அனைத்தையும் விட மிகச் சிறப்பாக அமைவது ஸ்டுட்கார்ட் கோடை விழா. கடந்த 4 நாட்களாக ஸ்டுட்கார்ட் அரச மாளிகை உள்ள பகுதியில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நேற்று மாலை நான் இத்திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். சில புகைப்படங்கள்.






Inline image 1


Inline image 2


Inline image 3


Inline image 4


Inline image 5


Inline image 7



Inline image 6


Inline image 8


Inline image 9

Wednesday, July 9, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

​​ .. Ein historischer Sieg..!
.......Ein historisher Rekord..!

இங்கு நேற்று இரவு போட்டி முடிந்ததிலிருந்து இந்த வார்த்தைகளைதான் அதிகம் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்து இவ்வாண்டு உலக காற்பந்து போட்டியில் ஒரு சாதனையை ஜெர்மனி செய்து இறுதிச் சுற்றுக்குச் செல்கின்றது.

நினைத்துப் பார்க்கவே இல்லை.

11ம் நிமிடத்தில் தோமஸ் மூல்லரின் முதல் கோல்.. அதன் பின்னர் மீரஸ்லாவ் க்லோஸாவின் 2வது கோல் அடுத்த 9 நிமிடங்களில்.. அடுத்த 3 நிமிடத்தில்  டோனி க்ரூஸின் 3ம் கோல் அடுத்த  2ம் நிமிடத்தில் க்ரூஸின் அடுத்த கோல்.. அடுத்த 7ம் நிமிடத்தில் கடீராவின் கோல் என அடுத்தடுத்து கோல் போட்டு பிரேசிலின் அணியை நிலை தடுமாற வைத்து விட்டது ஜெர்மனி அணி.  முதல் 45 நிமிடத்திலேயே 5  கோல்கள்.

2ம் பகுதி பிரேசிலின் கடுமையான எதிர்ப்புடன் தொடங்கினாலும் மீண்டும் ஷூலரின் ஒரு கோலும் மூல்லரின் 2ம் கோலும் ஜெர்மனியை வெற்றிப்பாதையிலேயே வைத்திருந்தது. 

16 முறை பிரேசிலின் அணி கோல் போட முயன்றும் அனைத்தையும் லாவகமாக தடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபித்து விட்டார் ஜெர்மனியில் கோல் கீப்பர் மானுவேல் நோயர். ஆயினும் இறுதியில் பிரேசில் ஒரு கோல் போட்டு உள்ளூர் மக்களின் அழுகைக்கு ஒரு ஆறுதலை தேடித்தந்தது என்று சொல்லலாம்.

ஆக ஒரு வழியாக இறுதிச் சுற்றுக்கு வந்து விட்டது ஜெர்மனி.. இங்கே மகிழ்ச்சி எல்லா இடங்களிலும்..  வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.. 

ஜெர்மனி மோதப் போவது நெதர்லாந்தா அல்லது அர்ஜெண்டீனாவா என்பது இன்று தெரிந்து விடும்..

சில படங்கள்


ஜெர்மன் அணி


Inline image 8
மூல்லர்

Inline image 2
க்ரூஸ்


Inline image 3
க்ளோஸ



Inline image 5
ஷூலர் + க்ளோஸ


Inline image 7
நோயர்



Inline image 6
பொது மக்கள்.. மகிழ்ச்சியில்..

Tuesday, July 8, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

Inline image 1


பிரேசில் மக்களின் முழு ஆதரவும் பிரேசில் குழுவுக்கே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கவனம் சிதறாமல் ஜெர்மனி குழு இன்று விளையாடி வெற்றி பெற வேண்டும். இது மிகச் சிரமமான காரியம் தான். ஆனாலும் ஜெர்மனி வெற்றி கிட்டும் என எதிர்பார்க்கிறேன். 

Sunday, July 6, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

நேற்று அபாரமாக விளையாடியது ​கோஸ்டா ரிக்கா. மலைத்து போனேன். டச்சு அணி எவ்வளவு திறமை வாய்ந்தது.. அணுபவம் வாய்ந்தது.. முதல் 90 நிமிடத்ல் ஒரு கோல் கூட போட முடியாமல் செய்ததோடு 15 நிமிட நீட்டிப்பு இரு முறை கொடுத்தும் கூட  நெதர்லாந்து அணிக்கு கோல் போட வாய்ப்பையே கொடுக்காத இவர்கள் நேற்று அனைவரையும் வியக்க வைத்தனர் என்று சொல்வேன்.

டச்சு அணியில் ரூபன், ஷ்னைடர் இருவரும் இல்லையென்றால் முதல் 45 நிமிடத்திலேயே கோஸ்டா ரிக்க குழு 2 கோல்களைப் போட்டிருக்கும் என்பது உறுதி.

எனது பாராட்டுக்கள் கோஸ்டா ரிக்கா குழுவினருக்கே.. அதிலும் குறிப்பாக கோல் கீப்பருக்கும்.. கொன்ஸாலஸுக்கும்.


The defender is delighted to have increased his nation's footballing profile at the World Cup in Brazil
Giancarlo Gonzalez says Costa Rica have achieved their World Cup goal of alerting a wider audience to their country's football.
Few expected Jorge Luis Pinto's men to cause much of a stir in Brazil and that was even before they were drawn into a tough Group D alongside Uruguay, Italy and England....

Monday, June 30, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

இன்றைய விளையாட்டில் ஜெர்மனி அல்ஜீரியாவுடன் மோதுகின்றது. இன்னம் 4  மணி நேரத்தில் விளையாட்டு தொடங்கப்பட உள்ளது. அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பும் வழியில் சாலையில் கார்கள் பல ஜெர்மானிய கொடி தூக்கிக் கொண்டு பறப்பதை பார்த்துக் கொண்டே வந்தேன். 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெறலாம் என நினைக்கின்றேன்.

2 நாட்களுக்கு முன்னர் கொலம்பியா-உருகுவே போட்டியில் கொலம்பியா மிக சிறப்பாக விளையாடியது. யார் இறுதியில் வெற்றியாளர் என்ற பட்டத்தை பெற்று உலகக் கோப்பையைப் பெறப் போகின்றார் என்பது கேள்விக் குறியாகவே இப்போது இருக்கின்றது.

Thursday, June 26, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

தமிழகப் பயணத்தில் இருந்தமையால் உலகக் காற்பந்து போட்டி விளையாட்டுக்களைக் காண முடியாத சூழலில் இருந்தேன். 

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் காற்பந்து போட்டியில் இன்று அமெரிக்காவுடன் ஜெர்மனியின் குழு மோதுகின்றது.

அமெரிக்க குழுவின்  பயிற்சியாளர் யூர்கன் க்ளீன்ஸ்மான் ஜெர்மனி குழுவின் பயிற்சியாளராக 2002 லிருந்து 2008 வரை இருந்தவர். அவருக்குப் பின்னர் அவரது உதவியாளர் யோகி லூ ஜெர்மனி குழுவுக்குப் பயிற்சியாளராகத் தொடர்கின்றார். 

ஆக இன்றைய போட்டி அமெரிக்க vs.  ஜெர்மனி என்பதை விட க்ளின்ஸ்மான் vs.   லூ என்று இங்கு காணப்படுகின்றது. 

Saturday, May 10, 2014

கோர்னாலியுஸ் குல்ரிட்ஸின் கலைப்பொருள் சேகரிப்புக்கள்

சுவிஸர்லாந்தின் பெர்ன் கலைக்கூட அருங்காட்சியகத்திற்கு 1400 விலை மதிப்பற்ற கலைப்பொருட்கள் கடந்த இரண்டு நாட்களில் சொந்த மாகியுள்ளன.

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களிடமிருந்து ஏராளமான கலைச் சிற்பங்களும் சித்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. பலர் இதில் ஈடுபட்டனர் என்பது பரவலாக அறிந்த விஷயமும் கூட. இவ்வாண்டு ஆரம்பத்தில் ஜோர்ஜ் க்ளூனி நடித்து வெளிவந்த  தி மோனுமெண்ட்ஸ் மேன் திரைப்படத்தின் மையக் கருத்தும் இதனைக் கொண்டதே. 

​அடோல்ஃப் ஹிட்லரின் ​கலைப்பொருள் விற்பனைத் தொடர்பாளர் குர்லிட்டின் மகன் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமது 81 வயதில் மரணமடைந்தார். இவர் தமது தந்தை சேகரிப்பில் மறைத்து வைத்திருந்த1400 கலைப்பொருட்களை பற்றி எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்புகளை மிகக் குறைத்துக் கொண்டு மூனிக் நகரில் உள்ள தமது பிரமாண்டமான அப்பார்மெண்ட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தார்.

2010ம் ஆண்டில் ஒரு முறை ஒன்பதாயிரம் யூரோவுடன் இவர் ஜெர்மனியிலிருந்து சுவிஸர்லாந்து கடந்து சென்ற ஒரு பயணத்தில் போலீஸார் விசாரனை செய்ய அது முதல்  ரகஸிய உளவுத்துறையின் தேடுதலுடன் இவரிடம் விலை மதிக்க முடியாத யூதர் காலத்தில் கொள்ளயடிக்கப்பட்ட பல கலைப்பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்க முடிந்தாலும் அவற்றை தக்க ஆதாரங்களுடன் கைப்பற்றுவது முடியாத காரியமாக இருந்தது. இவர் தம்மை பிறர் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இணையத் தொடர்பையும் கடந்த சில காலங்களில் முழுதாகத் துண்டித்துக் கொண்டாராம்.


கடந்த 7ம் தேதி, இருதய அருவைச் சிகிச்சையில் இவர் மரணமடைந்தார். ஜெர்மனிக்கே இந்த கலைப்படைப்புக்கள் சொந்தமாக வேண்டும் என்று முதலில் முடிவானது. ஆனால்  கோர்னாலியுஸ் குல்ரிட் தனது சேகரிப்பில் உள்ள அனைத்து கலைப்படைப்புக்களும் சுவிஸர்லாந்தின் பெர்ன் கலைக்கூட அருங்காட்சியகத்திற்குச் சேரவேண்டும் என கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உயில் எழுதி வைத்திருக்கின்றார். தன்னை ஒரு குற்றவாளி போல ஜெர்மனி நடத்தியது என்பதால் தனது உயிலில் இவை அனைத்தும் தமது மறைவுக்குப் பின்னர் சுவிஸர்லாந்துக்குச் சொந்தமாக வேண்டும் என இவர் தன் உயிலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒரு பில்லியன் யூரோ என மதிப்பிடப்படும் இவை அனைத்தும் பல கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவானவை. உலகப் புகழ்பெற்ற கலைஞர்களான ரெனொயர், பிக்காஸொ, பெக்மான், சாகில் ஆகியோரது படைப்புக்களும் இதில் உள்ளன. 1930 - 1940 வரையிலான கால கட்டத்தில் சேகரிக்கப்பட்டவை இவை. 

ஜெர்மானிய அரசு இந்த கலைப்படைப்புக்கள் ஜெர்மனிக்கும் சொந்தமாக வேண்டியது என இப்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றது. முடிவு எது வானாலும்  ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1400 கலைப்படைப்புக்கள் விரைவில் பொது மக்கள் பார்வைக்கு வரும் என்பது நல்ல செய்தி!

சுபா