Tuesday, May 24, 2022

ஜெர்மனியில் அணு ஆலைகள் மூடப்படும் நிலை


தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷிய-உக்ரேன் போரினால் ஐரோப்பாவில் எரிவாயு சக்தி பற்றாக்குறை நிலவுகின்றது என்பதை அறிந்திருப்போம். ஜெர்மனியின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதற்காகப் பொதுமக்கள் நலன் சார்ந்த சில திட்டங்களை ஜெர்மனி அரசு திட்டமிட்டு வருகின்றது. அந்த வகையில் 3 மாதங்களுக்கு வரி குறைக்கப்பட்ட பெட்ரோல்-டீசல், 3 மாதங்களுக்குக் குறைக்கப்பட்ட பொதுப்பயணக் கட்டணம் என்பவை அவற்றுள் சில.
எரிவாயு சக்தி பற்றாக்குறை எழுந்த போதும் கூட அணு ஆலைகளை முடக்கும் ஜெர்மனியின் திட்டம் தொடர்கின்றது. மாற்று சக்தியாக காற்று, நீர் வழி மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் செயல்பாடுகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேலும் 3 அணு ஆலைகள் ஜெர்மனியில் திட்டமிட்டபடியே மூடப்பட்டன. அவை Brokdorf, Schleswig-Holstein மாநிலத்தில், Grohnde, Lower Saxony மாநிலத்தில், மற்றும் Unit C, Gundremmingen, Bavaria மாநிலத்தில்.
மேலும் 3 அணு ஆலைகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளன. அதில் ஒன்று நான் வாழும் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் இருக்கின்றது. இவை மூன்றுமே இவ்வாண்டு இறுதியில் மூடப்படும்.
ஃபுக்குஷிமா அணு ஆலை வெடிப்பு ஏற்படுத்திய பேரிடருக்கு அடுத்து அன்றைய ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி ஜெர்மனியில் உள்ள அணு ஆலைகள் 2022 வாக்கில் முழுவதும் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
2022 இறுதி அணு ஆலைகள் அற்ற ஐரோப்பிய நாடாக ஜெர்மனி புதிய பரிணாமம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
-சுபா
24.5.2022
https://www.iamexpat.de/expat-info/german-expat-news/germany-closes-three-its-last-six-remaining-nuclear-power-plants?fbclid=IwAR0EdzWZWLPk_qJdWuUFCJlaeSpWFePsBC3G9TIdN9vTyJ2l1h2x4jk5Vkk

No comments:

Post a Comment