இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயமாக ஸ்ரூடர் 'Agenda 2010' என்ற ஒரு திட்டத்தை வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சில குறிப்புக்களை நான் எனது ஜூலை மாத வலைக்குறிப்புக்களில் அலசியிருந்தேன். இந்த புதிய திட்டத்தின் வழி தற்போது இயங்கி வரும் சமூக இலவச சேவைகள், மற்றும் அளவுக்கு மீறிய சலுகைகள் போன்றவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனதீவை, இந்த இலையுதிர்காலத்தில் பார்லிமெண்டில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
பொதுமக்கள், இந்த திட்டத்தின் வழி ஜெர்மனியின் தற்போதைய அரசாங்கம்
அமுல்படுத்தவிருக்கும் மாற்றங்களுக்காக காத்திருக்கின்றனர். புதுவருடத்தில் இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதன் வழி ஜெர்மனியின் பொருளாதரம் மிகத் துரித வளர்ச்சியைக் காண முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அரசாங்கம் எடுத்திருக்கும் புதிய திட்டங்களைப் பற்றிய விபரங்களை நாளைத் தருகிறேன்..
No comments:
Post a Comment