யூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த காலகட்டமான 2ம் உலக யுத்த நேரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Crystal Night நிகழ்வு 9,10, தேதி நவம்பர் மாதம் 1938ல் நிகழ்ந்தது. இந்த Crystal Night ஜெர்மனி முழுமைக்குமாக ஏறக்குரை 7500 யூதர்களின் வனிகத் தலங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஏறக்குறைய 400 சினாகோக் (யூத தேவாலயங்கள்) எரித்து அழிக்கப்பட்டன. இதே நாளில் 20,000க்கும் மேற்பட்ட யூதர்கள் concentration camps களில் அடைக்கப்பட்டனர்.
1989ம் வருடம் இந்த 9ம் திகதியில் கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் மேற்கு பெர்லினுக்கும் பொதுவாக மேற்கு ஜெர்மனிக்கும் செல்ல அனுமது அளித்து இரும்புக் கதவுகளை திறந்த நாள். இன்றைய ஜெர்மன் தலைமுறை மக்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு நாள்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் நினைவு கூறும் பல நிகழ்வுகள் ஜெர்மனி முழுதும் இன்றைக்கு ஏற்பாடாகியிருக்கின்றன. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து எழுதுகின்றேன்.
அன்புடன்
சுபா