Saturday, February 25, 2012

ஜெர்மனியின் புதிய அதிபர்

புதிய அதிபர் தேர்வாகிவிட்டார் சென்ற ஞாயிற்றுக் கிழமையே. செய்தி பகிர்ந்து கொள்ள எனக்குத் தான் அவகாசம் இல்லாமல் போய்விட்டது. 2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் தேர்தலில் எஸ்பிடி, க்ரூணன் கட்சிகளின் ஏகபோக ஆதரவுடன் இருந்த யோஆகிம் காவுக் இப்போது எல்லா கட்சிகளின் பேராதரவையும் பெற்று எந்தப் போட்டியுமின்றி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டாக்ஸியில் இவர் ஒரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தாராம். சான்ஸலர் அங்கேலா மேர்க்கல் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்ததாம். ஆளும் சிடியுவும், எப்டிபியும் உங்களை முன் மொழிகின்றோம். அதோடு எஸ்பிடி, க்ரூணன் கட்சிகளின் ஆதரவும் உள்ளது. ஒரு மனதான ஒரு முடிவு. என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்டாராம். திகைத்துப் போனவர் உடனே சரி என்று சொல்லி விட்டாராம்.

தொலைபேசியில் பேசி முடித்ததும் டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னாரம் தொலைபேசி யாரிடமிருந்து வந்தது என்ன விஷயம் என்று. அதோடு நேராக போக வேண்டிய இடத்தை மாற்றி நாடாளுமன்றக் கட்டடம் போகச் சொன்னாராம்.

டாக்ஸி காரருக்கு ஒரே சந்தோஷம். சாதாரணக் குடிமகனை ஏற்றிக் கொண்டு போன நாம் நாட்டின் அதிபரை இறக்கி விடப் போகின்றோம் நாடாளுமன்ற வாசலில் என்று. தொலைகாட்சி செய்தியில் பேசிய டாக்ஸி ஓட்டுனர் மலைத்துப் போன அதே தோரணையில் பேசினார்.

ஜெர்மனியின் புதிய அதிபரைப் பற்றி தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Joachim_Gauck

@திரு. நரசய்யா - உங்களுக்காக ஒரு செய்தி.. .Joachim Gauck was born into a family of sailors in Rostock, the son of Joachim Gauck, Sr. (born 1907), and Olga Gauck (née Warremann, born 1910). His father was an experienced ship's captain and distinguished naval officer (Captain at Sea), who after World War II worked as an inspector at the Neptun Werft shipbuilding company

இவரைப் பற்றி பிறகு ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

சுபா

No comments:

Post a Comment